Wednesday, November 9, 2011

மற்ற ஜீவராசிகளுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு:


இறைவன் இவ்வுலகை படைக்கும் போது  தாவரம், நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன,மிருகம்,மனிதன்,தேவர்கள் என ஏழுவகையான பேதங்களுடைய ஜீவராசிகளைப் படைத்துள்ளார். ஒவ்வொரு ஜீவராசிக்குள்ளேயே நாம் அநேக பேதங்களைக் காண்கிறோம்.ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒவ்வொரு குணத்தை இறைவன் கொடுத்துள்ளார்.
உதாரணமாக நாம் அன்றாட வாழ்க்கையில் வெவ்வேறு பயன்பாட்டிற்கு வெவ்வேறு விதமான கீரைகளைப் (அதாவது தாவரங்களை) பயன்படுத்துகிறோம். அதேபோல நாய்க்கு ஒருவிதமான தன்மை, யானைக்கு ஒருவிதமான தன்மை, நரிக்கு ஒருவிதமான தன்மை, இப்படி ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒவ்வொரு குணத்தை இறைவன் கொடுத்துள்ளார். ஆனால் மற்ற ஜீவராசிகள் தம்முடைய உணவை தேடிக்கொள்வதர்க்கும், தன்னைக் காத்துக்கொள்ள மட்டுமே அதனால் முடியும், ஆனால் மனிதனுக்கு இறைவன் சிந்திக்கக்கூடிய தன்மையையும், தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும், எது சரி, எது தவறு என சிந்தித்து செயல்படக்கூடிய வாய்ப்பைக் கொடுத்துள்ளார்.
கூர்ந்து கவனித்தால் மற்ற ஜீவராசிகள் தம்முடைய குணத்தை தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியாது. மனிதன் மட்டும்தான் தன்னுடைய குணத்தை மாற்றிக்கொள்ளமுடியும்.எனவேதான் நம முன்னோர்கள் “மானிடராய் பிறத்தல் அரிது” என கூறியுள்ளார்கள். எனவே நம்முடைய மனிதப்பிறவினுடைய மேன்மையை அறிந்து எந்த லட்சியத்திற்காக இம்மனிதப்பிறவியை எடுத்தோமோ அந்த லட்சியத்தை அடைவதற்க்காக முயற்சிப்போம்.
மேலும் மனிதப்பிறவியின் பெருமையைப் பற்றி அடுத்த இடுக்கையில் சிந்திப்போம்.

No comments:

Post a Comment